சோவெனக் கொட்டிய மழை நின்று ,
சொட்டு சொட்டாய் வடிகிறது...
ஓடும் மணித்துளியாய் ,
உருளும் நீர்த்துளி...
ஒட்டுமொத்த அழுக்கையும்
கழுவி விட்ட களைப்பில் !
நன்று தான் ....!
என்று தான் பெய்யும் மழை....
நிழலாய் துரத்தும் நேற்றைய கோபமும்,
காரணம் சொல்லக் கற்றுக்கொள்ளும் கபடமும்..
குப்பையாய் கொட்டிக் கிடக்கும் மனதில்?
முடிந்தால் சில துளிகளாவது
பெற்றுத் தாருங்களேன் ....
மனதில் மிச்சமிருக்கும் எச்சம் துடைக்க.....!
No comments:
Post a Comment