Translate

Sunday, May 6, 2012

பேனாவிடமிருந்து .....

கழுத்து அமுக்கப்படுகிறதாம் ....
ரத்தம் மையாய்க் கசிகிறதாம் ...
வலி வலி என முனங்கியதாம் ..
பேனாவிற்கு பிரசவமாம் ..!
பெற்றது பல நூறு வரிகளாம் ...!
அத்தனையும் முத்துக்களாம் ...!
இன்றோ ...
வயதாகி விட்டதாம்  !!!!
நானும் எழுதுகிறேன் ...
இன்டர்நெட்டில் ....
பேனாவிடம் கதை கேட்டு...!!!




Thursday, May 3, 2012

போர்வை!

பனி இரவில் ,
உன் ஸ்பரிசம் ...
எத்தனை சுகம் ..
இழுத்து அனைத்துக்  கொள்கிறேன்..
நீ முகம் வருட ...
மூடிக் கொள்கிறேன் ..
இமைகளை ...
காலையில் ....
கட்டிலின் ஓரமாய் ...
நீ ... போர்வை !!!