நீ நிற்க நானும் நிற்கிறேன் !
நீ நடக்க நானும் நடக்கிறேன்!
வடிவொத்திருக்கிறேன்!
வாய் பேசுவதில்லை!
என்ன விந்தை !
என்னைப் போல் நீ!
உன்னோடு உரசி நின்று,
வேடிக்கை பார்க்கிறேன் !
நீள்கிறேன்! நகர்கிறேன்!
என்ன தான் என் வாழ்க்கை ?
தினம் நீள்வட்டமாய் என்னைச் சுற்றும் ,
ஏராளம் வினாக்கள்!
குப்பை தொட்டியில் வீழும்
வெள்ளைக் காகிதமாய்...
குளத்தில் எறியும் கூழாங்கல்லாய்..
காரணமின்றி , சில வேளை..
மர்மமாய் மறைந்தும் போகிறேன்!
மௌனமும் மறைதலுமே என் வாழ்க்கையோ!
ஒரு வட்டத்தில் சிக்கிக்கொண்ட ...
ஒற்றைப் புள்ளி நான் !
ம்ம்ம்.. என்ன செய்ய?
உன் நிழலாய்ப் போய்விட்டேனே !!!!
Translate
Monday, April 20, 2009
Thursday, April 16, 2009
ஓர் அழுகுரல் !
கஸ்தூரி மஞ்சளிட்டு, கையளவு திலகமிட்டு,
கானல் நீரப்போலே கண்ணுரங்கிப் போறவளே...
எனக்கும் வழி இருக்கு...
குப்பைத்தொட்டி கோயில் குளம்...
கவலையின்றிப் போய் வாடி ..
பொட்டையாப் பொறந்த என்ன..
கொல்லவும் மனமும் இல்ல ..
உன் வேதனை தீயாலே ..
வெளிட்சமூட்டி போறவளே..
கவலையின்றிப் போய் வாடி..
என்னப்பன் என்னக் கண்டு ..
ஏளனமாச் சிரிச்சானே ..
உன் விழி நீரெடுத்து ..
என் விழி துடைப்பேனே...
கவலையின்றிப் போய் வாடி..
பெற்றன்னை இடி தாங்கி..
பெண் என்னை காத்தாயே..
பேர் வாங்கித் தருவேன்டி ..
பெற்றவளே போய் வாடி !
காலங்களும் மாறி விடும் ..
கவலையின்றிப் போய் வாடி !.
கானல் நீரப்போலே கண்ணுரங்கிப் போறவளே...
எனக்கும் வழி இருக்கு...
குப்பைத்தொட்டி கோயில் குளம்...
கவலையின்றிப் போய் வாடி ..
பொட்டையாப் பொறந்த என்ன..
கொல்லவும் மனமும் இல்ல ..
உன் வேதனை தீயாலே ..
வெளிட்சமூட்டி போறவளே..
கவலையின்றிப் போய் வாடி..
என்னப்பன் என்னக் கண்டு ..
ஏளனமாச் சிரிச்சானே ..
உன் விழி நீரெடுத்து ..
என் விழி துடைப்பேனே...
கவலையின்றிப் போய் வாடி..
பெற்றன்னை இடி தாங்கி..
பெண் என்னை காத்தாயே..
பேர் வாங்கித் தருவேன்டி ..
பெற்றவளே போய் வாடி !
காலங்களும் மாறி விடும் ..
கவலையின்றிப் போய் வாடி !.
Wednesday, April 15, 2009
அவரால்..!
வெள்ளைச் சிறகொன்று கேட்டேன்..
விண்ணில் பறக்க,
வண்ணச் சிறகொன்று தந்தார்...
பறந்து பாரென்று!
வேடிக்கை பார்த்தே ,
விரயமாக்கினேன் காலத்தை...
சிறகுகள் உதிர ,
மீண்டும் வேண்டுமென்றேன்!
நடந்து பாரென்றார்...
நடந்தேன்.. நடந்தேன்..
மிக விரைவாக ...
விர்ரென்று பறந்தேன்!
இறக்கை முளைத்திருந்தது !
திடுக்கிட்டு விழித்தேன்!
இது திடீர்க் கனவு !
ஆம் ! சில கொடுக்கப்படுகின்றன..
சில பறிக்கப்படுகின்றன..
"அவரால்"... நாம் கற்றுக்கொள்ள!
விண்ணில் பறக்க,
வண்ணச் சிறகொன்று தந்தார்...
பறந்து பாரென்று!
வேடிக்கை பார்த்தே ,
விரயமாக்கினேன் காலத்தை...
சிறகுகள் உதிர ,
மீண்டும் வேண்டுமென்றேன்!
நடந்து பாரென்றார்...
நடந்தேன்.. நடந்தேன்..
மிக விரைவாக ...
விர்ரென்று பறந்தேன்!
இறக்கை முளைத்திருந்தது !
திடுக்கிட்டு விழித்தேன்!
இது திடீர்க் கனவு !
ஆம் ! சில கொடுக்கப்படுகின்றன..
சில பறிக்கப்படுகின்றன..
"அவரால்"... நாம் கற்றுக்கொள்ள!
Thursday, April 9, 2009
முத்தமிட்ட மழையும்! சத்தமிட்ட சருகும் !
சட்டென போட்ட தூறலுக்கு ..
ஓரமாய் நின்றேன் சாலையில்...
சட சடவென ஓசை கேட்க ..
ஆவலாய் கேட்டேன் ஆசையில் ..
முத்தமிட்ட மழை நோக்கி ,
சத்தமிட்டது சருகு !!!!
"சத்தமின்றி முத்தம் தா மழையே!".
பெற்றவளுக்கே முத்தம் இல்லையா?
மேகம் சண்டையிட,
மின்னலாய் தெறித்தது கோபம்!.
மெல்ல சிரித்த மழைத்துளியோ ,
முத்தமிட்டது மலரை ..
மலர்ந்தது .. மௌனம்... மட்டுமே!!!
புரிந்தது ..சத்தமிடலே சருகின் தனித்துவம்!
மௌனமன்று!!
எட்டிப்பார்த்த என்னையும் ..
இலவசமாய் முத்தமிட்டது மழைத்துளி !
முத்தமிடலே மழையின் தனித்துவமோ!
எது எப்படியோ...
எனக்கே எனக்கான உலகில்..
மழை முத்தமிடுகிறது !!!
சருகு சத்தமிடுகிறது!!!
ஓரமாய் நின்றேன் சாலையில்...
சட சடவென ஓசை கேட்க ..
ஆவலாய் கேட்டேன் ஆசையில் ..
முத்தமிட்ட மழை நோக்கி ,
சத்தமிட்டது சருகு !!!!
"சத்தமின்றி முத்தம் தா மழையே!".
பெற்றவளுக்கே முத்தம் இல்லையா?
மேகம் சண்டையிட,
மின்னலாய் தெறித்தது கோபம்!.
மெல்ல சிரித்த மழைத்துளியோ ,
முத்தமிட்டது மலரை ..
மலர்ந்தது .. மௌனம்... மட்டுமே!!!
புரிந்தது ..சத்தமிடலே சருகின் தனித்துவம்!
மௌனமன்று!!
எட்டிப்பார்த்த என்னையும் ..
இலவசமாய் முத்தமிட்டது மழைத்துளி !
முத்தமிடலே மழையின் தனித்துவமோ!
எது எப்படியோ...
எனக்கே எனக்கான உலகில்..
மழை முத்தமிடுகிறது !!!
சருகு சத்தமிடுகிறது!!!
Subscribe to:
Comments (Atom)