உள்ளக் கிடங்கில்
ஒளிந்திருக்கும்
ஒட்டடையில்....
நூலாம்படையாய் பல
நூறாயிரம் சொற்கள்
தொங்கிக் கிடக்கின்றன
ஓசையின்றி..
எப்போது விழுமோ ?
எங்கு விழுமோ?
வசைச் சொல்லோ?
இன் சொல்லோ?
அவசரமாய் அவ்வப்போது
சுத்தம் செய்கிறேன்..
சத்தமின்றி என்
எலும்பில்லா நாவினால்!!
Translate
Monday, June 29, 2009
ஒட்டுப் போட்ட கவிதை!
எண்ணக் கயிற்றில்
முடிந்து வைத்த
வண்ணச் சொற்களின்
முனங்கல் கேட்டு ...
முடிச்சவிழ்த்தேன் !
பிய்த்துக் கொண்டு
வந்தன சில
நைந்த வார்த்தைகள்!
வொட்டி வெட்டி உருவாக்க..
உயிர் பெற்றது என்...
ஒட்டுப் போட்ட கவிதை!
முடிந்து வைத்த
வண்ணச் சொற்களின்
முனங்கல் கேட்டு ...
முடிச்சவிழ்த்தேன் !
பிய்த்துக் கொண்டு
வந்தன சில
நைந்த வார்த்தைகள்!
வொட்டி வெட்டி உருவாக்க..
உயிர் பெற்றது என்...
ஒட்டுப் போட்ட கவிதை!
Wednesday, June 24, 2009
கூண்டுக் கிளி..
இலையுதிர்காலம் போல் ..
சிறகுதிர்காலம் இருக்கக்கூடாதா?
வண்ணச் சிறகிருந்து...
என்ன பயன்?
கூண்டுக்குள் அல்லவா இருக்கிறேன்!
என்னைப் பார்த்து சிரிக்கிறாயே?
ஏளனமா?
சரிதான் ! உனக்கெப்படி புரியும் ..
என் க்ரீச் க்ரீச் சத்தத்தைத் தவிர?!
- கூண்டுக்குள் கிளி.
சிறகுதிர்காலம் இருக்கக்கூடாதா?
வண்ணச் சிறகிருந்து...
என்ன பயன்?
கூண்டுக்குள் அல்லவா இருக்கிறேன்!
என்னைப் பார்த்து சிரிக்கிறாயே?
ஏளனமா?
சரிதான் ! உனக்கெப்படி புரியும் ..
என் க்ரீச் க்ரீச் சத்தத்தைத் தவிர?!
- கூண்டுக்குள் கிளி.
Friday, June 19, 2009
மழை நீர்?!
குடை கண்ணீர்
வடிக்கிறதே !
மழை நின்று
விட்டதென்றா?
வாசலில் வைத்து விட்டனர் என்றா?
வடிக்கிறதே !
மழை நின்று
விட்டதென்றா?
வாசலில் வைத்து விட்டனர் என்றா?
Wednesday, June 17, 2009
மலரே!மலரே!
விடியலைத் தேடித் தேடி ...
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!
Tuesday, June 16, 2009
கற்பனைக் குதிரை !
சண்டித்தனம் செய்யும்
கற்பனைக் குதிரையை ,
சுண்டி இழுத்துச் சரிக்கட்டி
ஓட விட்டால்....
பேனாவின் முனை மழுங்கியும்
நிறுத்த முடியவில்லை
தறிகெட்டு ஓடும் குதிரையை !
கொஞ்சம் நில் என்றால்...
இறந்து விடும் இந்த நொடிக்காய்
காத்திருப்பதில்லை காலம் !
அடுத்த நொடியை
பிரசவிக்கச் சென்று விடுகிறது
அவசரமாக என்றது!
அது வரை அமைதியாக
இருந்த மனம்...
அட இது என் கற்பனையா என
தாவிக் குதித்தது குரங்காய்!
அடுத்த நினைவிற்கு !
உண்மை தான்..
ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதில்லை
ஒரு நொடிக்கு மேல்!
மனம் தாவிக் குதிக்க...இப்போது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது குதிரை...
என் கற்பனைக் குதிரை!
கற்பனைக் குதிரையை ,
சுண்டி இழுத்துச் சரிக்கட்டி
ஓட விட்டால்....
பேனாவின் முனை மழுங்கியும்
நிறுத்த முடியவில்லை
தறிகெட்டு ஓடும் குதிரையை !
கொஞ்சம் நில் என்றால்...
இறந்து விடும் இந்த நொடிக்காய்
காத்திருப்பதில்லை காலம் !
அடுத்த நொடியை
பிரசவிக்கச் சென்று விடுகிறது
அவசரமாக என்றது!
அது வரை அமைதியாக
இருந்த மனம்...
அட இது என் கற்பனையா என
தாவிக் குதித்தது குரங்காய்!
அடுத்த நினைவிற்கு !
உண்மை தான்..
ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதில்லை
ஒரு நொடிக்கு மேல்!
மனம் தாவிக் குதிக்க...இப்போது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது குதிரை...
என் கற்பனைக் குதிரை!
Friday, June 12, 2009
செல்ல நாய் !
ஆளில்லா வீட்டில் ..
ஓடிக் களைத்து..
கத்திப் பின் ..
கண் செருக உறங்கி...
விழித்துப் பார்த்த ...
என்னை ...
சிவந்த கண்ணாய்..
கூர் நகம் கொண்டு ...
பற்கடிப்புடன்..
தலை விரி கோலமாய்..
இழுத்துக் கொண்டது..
தனிமை!!
நான்...!?
செல்ல நாய்க் குட்டியாம்!
காத்திருக்கிறேன் எஜமானன் வரவுக்காய்!
ஓடிக் களைத்து..
கத்திப் பின் ..
கண் செருக உறங்கி...
விழித்துப் பார்த்த ...
என்னை ...
சிவந்த கண்ணாய்..
கூர் நகம் கொண்டு ...
பற்கடிப்புடன்..
தலை விரி கோலமாய்..
இழுத்துக் கொண்டது..
தனிமை!!
நான்...!?
செல்ல நாய்க் குட்டியாம்!
காத்திருக்கிறேன் எஜமானன் வரவுக்காய்!
வினாக் கவிதை !
நழுவுகின்ற இந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில்...
தொக்கி நிற்கின்றன வினாக்கள்!
எதைக் கவிதையாக்க?..
எப்படி கவிதையாக்க?..
சிந்தனைச் சுரப்பு
வற்றி விடும் அந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில் ...
வினாக்களும் கவிதையாகின்றன!!
நொடியின் இறுதிப் புள்ளியில்...
தொக்கி நிற்கின்றன வினாக்கள்!
எதைக் கவிதையாக்க?..
எப்படி கவிதையாக்க?..
சிந்தனைச் சுரப்பு
வற்றி விடும் அந்த ஒரு
நொடியின் இறுதிப் புள்ளியில் ...
வினாக்களும் கவிதையாகின்றன!!
Subscribe to:
Comments (Atom)