சட்டென போட்ட தூறலுக்கு ..
ஓரமாய் நின்றேன் சாலையில்...
சட சடவென ஓசை கேட்க ..
ஆவலாய் கேட்டேன் ஆசையில் ..
முத்தமிட்ட மழை நோக்கி ,
சத்தமிட்டது சருகு !!!!
"சத்தமின்றி முத்தம் தா மழையே!".
பெற்றவளுக்கே முத்தம் இல்லையா?
மேகம் சண்டையிட,
மின்னலாய் தெறித்தது கோபம்!.
மெல்ல சிரித்த மழைத்துளியோ ,
முத்தமிட்டது மலரை ..
மலர்ந்தது .. மௌனம்... மட்டுமே!!!
புரிந்தது ..சத்தமிடலே சருகின் தனித்துவம்!
மௌனமன்று!!
எட்டிப்பார்த்த என்னையும் ..
இலவசமாய் முத்தமிட்டது மழைத்துளி !
முத்தமிடலே மழையின் தனித்துவமோ!
எது எப்படியோ...
எனக்கே எனக்கான உலகில்..
மழை முத்தமிடுகிறது !!!
சருகு சத்தமிடுகிறது!!!
No comments:
Post a Comment