வெள்ளைச் சிறகொன்று கேட்டேன்..
விண்ணில் பறக்க,
வண்ணச் சிறகொன்று தந்தார்...
பறந்து பாரென்று!
வேடிக்கை பார்த்தே ,
விரயமாக்கினேன் காலத்தை...
சிறகுகள் உதிர ,
மீண்டும் வேண்டுமென்றேன்!
நடந்து பாரென்றார்...
நடந்தேன்.. நடந்தேன்..
மிக விரைவாக ...
விர்ரென்று பறந்தேன்!
இறக்கை முளைத்திருந்தது !
திடுக்கிட்டு விழித்தேன்!
இது திடீர்க் கனவு !
ஆம் ! சில கொடுக்கப்படுகின்றன..
சில பறிக்கப்படுகின்றன..
"அவரால்"... நாம் கற்றுக்கொள்ள!
No comments:
Post a Comment