கஸ்தூரி மஞ்சளிட்டு, கையளவு திலகமிட்டு,
கானல் நீரப்போலே கண்ணுரங்கிப் போறவளே...
எனக்கும் வழி இருக்கு...
குப்பைத்தொட்டி கோயில் குளம்...
கவலையின்றிப் போய் வாடி ..
பொட்டையாப் பொறந்த என்ன..
கொல்லவும் மனமும் இல்ல ..
உன் வேதனை தீயாலே ..
வெளிட்சமூட்டி போறவளே..
கவலையின்றிப் போய் வாடி..
என்னப்பன் என்னக் கண்டு ..
ஏளனமாச் சிரிச்சானே ..
உன் விழி நீரெடுத்து ..
என் விழி துடைப்பேனே...
கவலையின்றிப் போய் வாடி..
பெற்றன்னை இடி தாங்கி..
பெண் என்னை காத்தாயே..
பேர் வாங்கித் தருவேன்டி ..
பெற்றவளே போய் வாடி !
காலங்களும் மாறி விடும் ..
கவலையின்றிப் போய் வாடி !.
No comments:
Post a Comment