உள்ளக் கிடங்கில்
ஒளிந்திருக்கும்
ஒட்டடையில்....
நூலாம்படையாய் பல
நூறாயிரம் சொற்கள்
தொங்கிக் கிடக்கின்றன
ஓசையின்றி..
எப்போது விழுமோ ?
எங்கு விழுமோ?
வசைச் சொல்லோ?
இன் சொல்லோ?
அவசரமாய் அவ்வப்போது
சுத்தம் செய்கிறேன்..
சத்தமின்றி என்
எலும்பில்லா நாவினால்!!
No comments:
Post a Comment