Translate

Friday, June 12, 2009

செல்ல நாய் !

ஆளில்லா வீட்டில் ..
ஓடிக் களைத்து..
கத்திப் பின் ..
கண் செருக உறங்கி...
விழித்துப் பார்த்த ...
என்னை ...
சிவந்த கண்ணாய்..
கூர் நகம் கொண்டு ...
பற்கடிப்புடன்..
தலை விரி கோலமாய்..
இழுத்துக் கொண்டது..
தனிமை!!
நான்...!?
செல்ல நாய்க் குட்டியாம்!
காத்திருக்கிறேன் எஜமானன் வரவுக்காய்!


No comments:

Post a Comment