சண்டித்தனம் செய்யும்
கற்பனைக் குதிரையை ,
சுண்டி இழுத்துச் சரிக்கட்டி
ஓட விட்டால்....
பேனாவின் முனை மழுங்கியும்
நிறுத்த முடியவில்லை
தறிகெட்டு ஓடும் குதிரையை !
கொஞ்சம் நில் என்றால்...
இறந்து விடும் இந்த நொடிக்காய்
காத்திருப்பதில்லை காலம் !
அடுத்த நொடியை
பிரசவிக்கச் சென்று விடுகிறது
அவசரமாக என்றது!
அது வரை அமைதியாக
இருந்த மனம்...
அட இது என் கற்பனையா என
தாவிக் குதித்தது குரங்காய்!
அடுத்த நினைவிற்கு !
உண்மை தான்..
ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதில்லை
ஒரு நொடிக்கு மேல்!
மனம் தாவிக் குதிக்க...இப்போது
இளைப்பாறிக் கொண்டிருக்கிறது குதிரை...
என் கற்பனைக் குதிரை!
No comments:
Post a Comment