Translate

Wednesday, June 17, 2009

மலரே!மலரே!

விடியலைத் தேடித் தேடி ...
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!

1 comment: