விடியலைத் தேடித் தேடி ...
தொலைந்தது இரவு ...
விடியலில்!
சின்ன கோடாய் கசிகிறது...
வெயில் ஜன்னல் வழி!
மெல்ல இதழ் விரித்துச்
சிரித்தது மலர்!
சற்று நேரத்திற்குள் ,
மேள தாளமாய் இடி !
மலருக்கு மஞ்சள் நீராட்டாம்..
சொட்டு சொட்டாய்
நனைக்கிறது மழை!
தளிர் இலையோ
தண்டுக்குக் குடை பிடித்தபடி!
மறுநாள் வாடும் மலருக்கு ,
இத்தனை மெநக்கெடலா ?
ஒரு கணம் புரியவில்லை!
விளையாட்டாய் பறித்தாள்..
ஐந்து வயது அத்தை மகள் ..
ஆசையாய் சூட...
அந்த கணம் புரிந்தது!
இறைவனின் இயற்கைப்
படைப்பு எனக்காக!
மலரும் சிரித்தது ...
மரண பயமின்றி!
maranathin pinbu nam mel erupadhu andha malardhane???
ReplyDelete