Translate

Thursday, March 26, 2009

தேடல்...

ஜன்னலோரமாய் ...
வேடிக்கை பார்த்து...
விரல் நுனி நகம் கடித்து ...
விழி அயரும் வேளை....
சுழலும் மின்விசிறியின் சத்தமும் ..
சூறாவளியாய்....
எத்தனை முறை பார்த்தாலும் ...
இப்படித்தானிருப்பேன் என்றது...
கடிகார முள்ளும் கோபமாய் ...
எது எப்படியாயினும்....
மாலை முதல் இரவு ஏழு வரை...
எனக்கான தேடல் ....
" நீ " மட்டுமே என்று...
கண்டுகொண்டேன் ஒரு நாள் ...
உனக்கான காத்திருப்பில் !!!!!!

Monday, March 23, 2009

அவனும்,அவளும் !

துடித்த உள்ளத்தை ,
அடக்க இயலவில்லை !
திரும்பினாள் அவன் பக்கம்..
இயக்கமே இன்றி அவன்!

பார்வையின் அர்த்தம்,
நட்பு தானோ?
திணறினான் அவன்..இதோ
நாலைந்து வருடமாய்...

அவனும் அவளும் நண்பர்கள்
நாகரீகமோ நட்போ கருதி
சொல்லவில்லை அவளும்!
கேட்கவில்லை அவனும்!

இதோ... இன்று நினைத்தாள்
சொல்லலாமென்று...
அவன் விழிகளிலும் துளிகள்
விட்டுப் பிரிவோமென்று...

முடிவெடுத்த அவனும் ,
விடைபெற்றான்!
நட்பால் - விதி
செய்த விளையாட்டால்!

கடைசியாக ஒரு பார்வை..
பதிந்து விட்டது அவனில்!
இதோ.. வாழ்ந்து கொண்டிருக்கிறான்!
எதிர் பாரா சந்திப்பு!

அவள் எதிர்கொள்கிறாள்!
நெற்றியில் நரை முடி...
பரிமாறிக்கொண்டனர் பார்வையை ..
பல வருடங்கழித்து!

ஆம் ! இருவருமே மன()மின்றி
வாழ்ந்திருந்தனர் தம் எண்ணங்களோடு!!!!

Friday, March 20, 2009

பாடம்!

மூச்சிரைக்க ஓடி வந்து ,
பேச்சின்றிச் செல்லும் பேரலையின் ...
சங்கேத பாஷயை மொழிபெயர்க்கக்
காத்திருந்தேன் கரையோரம்...
முன்னந்தலையில் முட்டிக்கொண்ட மேகமிரண்டும்,
மெல்லச் சிரித்தன என்னைப்பார்த்து !
ஒற்றை மரத்தைச் சுற்றி
ஓடி விளையாடிய நாள் துவங்கி,
மொட்டை மாடியில் முகமூடித்
தூங்கிய நேற்று வரை....
ஓராயிரம் நினைவுகள் !!!
கடைசியில் ........
காதோரம் தெறித்த கடல்நீரோ சொன்னது ....
கற்றுத் தந்தேன் உனக்கு கவி எழுதவென்று!!!!

Wednesday, March 18, 2009

மறந்து போன கவிதை ?!

எண்ணத்தை வண்ணமாக்கி ...
மனதில் உன்னை கருத்தாங்கி...
எழுத்தாணி கொண்டு எழுதி ..
மன்றத்தில் உன்னை பெற்றெடுக்க...
மாதக்கணக்கில் மௌனித்தேன் !
நீயோ....
மலரும் முன்னே கருகி ..
சருகாகி விட்ட சலையோரப் பூப்போல் ,
சொற்ப வாழ்நாளில் போன
சிற்ப கவிதையே..!
ஆனந்த வலி தான் எனக்கு..
ஆகையால் பெற்றெடுப்பேன் உன்னைப்போல்
அன்றாடம் பல நூறு !!!!

Thursday, March 12, 2009

அன்றொரு நாள் ...

கார்முகில்கள் இரண்டு காதல் வயப்பட ,
கருவில் உருவான மழைத்துளி ,
புன்னகைத்த பூக்களில் மனமிழந்து ,
மலரதை முத்தமிட்ட மறுநொடி ....
கட்டவிழ்த்த காற்று வந்து கண்டிக்க ,
இதழ் ஊர்ந்த மழைத்துளி ,
இலைகாம்பில் உருண்டோடி ,
உரசி நின்றது வேரடியில் ....
தன் காதல் கதை சொல்லி ,
தற்கொலைக்கு முயற்சிக்க ,
தயங்காமல் நீரை வேர் உறிய ,
மாண்டாலும் துளிகள் மலரோடு கலந்தன ....
இம்மழைத்துளி தான் கொண்ட காதல் ,
எம் வீட்டுச் செடிகளில் ஏராள ரோஜாக்கள் !!!
எட்டிப்பறிக்க எண்ணினேன் ,
என்றாலும் முடியவில்லை !
ஏனென்றால் ...
என்னைப் பார்த்து சிரித்தன,
இதழ் மீது இரு துளிகள் !!