Translate

Wednesday, March 18, 2009

மறந்து போன கவிதை ?!

எண்ணத்தை வண்ணமாக்கி ...
மனதில் உன்னை கருத்தாங்கி...
எழுத்தாணி கொண்டு எழுதி ..
மன்றத்தில் உன்னை பெற்றெடுக்க...
மாதக்கணக்கில் மௌனித்தேன் !
நீயோ....
மலரும் முன்னே கருகி ..
சருகாகி விட்ட சலையோரப் பூப்போல் ,
சொற்ப வாழ்நாளில் போன
சிற்ப கவிதையே..!
ஆனந்த வலி தான் எனக்கு..
ஆகையால் பெற்றெடுப்பேன் உன்னைப்போல்
அன்றாடம் பல நூறு !!!!

No comments:

Post a Comment