துடித்த உள்ளத்தை ,
அடக்க இயலவில்லை !
திரும்பினாள் அவன் பக்கம்..
இயக்கமே இன்றி அவன்!
பார்வையின் அர்த்தம்,
நட்பு தானோ?
திணறினான் அவன்..இதோ
நாலைந்து வருடமாய்...
அவனும் அவளும் நண்பர்கள்
நாகரீகமோ நட்போ கருதி
சொல்லவில்லை அவளும்!
கேட்கவில்லை அவனும்!
இதோ... இன்று நினைத்தாள்
சொல்லலாமென்று...
அவன் விழிகளிலும் துளிகள்
விட்டுப் பிரிவோமென்று...
முடிவெடுத்த அவனும் ,
விடைபெற்றான்!
நட்பால் - விதி
செய்த விளையாட்டால்!
கடைசியாக ஒரு பார்வை..
பதிந்து விட்டது அவனில்!
இதோ.. வாழ்ந்து கொண்டிருக்கிறான்!
எதிர் பாரா சந்திப்பு!
அவள் எதிர்கொள்கிறாள்!
நெற்றியில் நரை முடி...
பரிமாறிக்கொண்டனர் பார்வையை ..
பல வருடங்கழித்து!
ஆம் ! இருவருமே மன(ண)மின்றி
வாழ்ந்திருந்தனர் தம் எண்ணங்களோடு!!!!
No comments:
Post a Comment