கார்முகில்கள் இரண்டு காதல் வயப்பட ,
கருவில் உருவான மழைத்துளி ,
புன்னகைத்த பூக்களில் மனமிழந்து ,
மலரதை முத்தமிட்ட மறுநொடி ....
கட்டவிழ்த்த காற்று வந்து கண்டிக்க ,
இதழ் ஊர்ந்த மழைத்துளி ,
இலைகாம்பில் உருண்டோடி ,
உரசி நின்றது வேரடியில் ....
தன் காதல் கதை சொல்லி ,
தற்கொலைக்கு முயற்சிக்க ,
தயங்காமல் நீரை வேர் உறிய ,
மாண்டாலும் துளிகள் மலரோடு கலந்தன ....
இம்மழைத்துளி தான் கொண்ட காதல் ,
எம் வீட்டுச் செடிகளில் ஏராள ரோஜாக்கள் !!!
எட்டிப்பறிக்க எண்ணினேன் ,
என்றாலும் முடியவில்லை !
ஏனென்றால் ...
என்னைப் பார்த்து சிரித்தன,
இதழ் மீது இரு துளிகள் !!
No comments:
Post a Comment