Translate

Friday, March 20, 2009

பாடம்!

மூச்சிரைக்க ஓடி வந்து ,
பேச்சின்றிச் செல்லும் பேரலையின் ...
சங்கேத பாஷயை மொழிபெயர்க்கக்
காத்திருந்தேன் கரையோரம்...
முன்னந்தலையில் முட்டிக்கொண்ட மேகமிரண்டும்,
மெல்லச் சிரித்தன என்னைப்பார்த்து !
ஒற்றை மரத்தைச் சுற்றி
ஓடி விளையாடிய நாள் துவங்கி,
மொட்டை மாடியில் முகமூடித்
தூங்கிய நேற்று வரை....
ஓராயிரம் நினைவுகள் !!!
கடைசியில் ........
காதோரம் தெறித்த கடல்நீரோ சொன்னது ....
கற்றுத் தந்தேன் உனக்கு கவி எழுதவென்று!!!!

No comments:

Post a Comment