கடுங்குளிரில் வியர்க்கிறதோ ...
புல்வெளியில் பனித்துளிகள் !
கதிரென்னும் கைக்குட்டையால்...
காலையிலே துடைக்கிறதோ!
நிலமகளின் இடைதன்னை...
இழுக்கிறதோ கடலலைகள்!
அதில் நாணி அவள் ஓட ...
அழிகிறதோ என் அடிச்சுவடு !
மங்கையவள் மார்பகமோ ....
மலை முகடு இவ்விரண்டும்!
மனம் மயங்கும் கதிரவனோ...
துயிலுகிறான் அவள் நெஞ்சத்தில்!
இமை மூடி திறக்கும் இருநொடிக்குள்...
கண்டுவிட்டேன் இத்தனையும் !
கண்ட பின்னே காதலித்தேன் .....
நானும் இந்த நானிலத்தை!
No comments:
Post a Comment