இதழ் விரித்த இளம் ரோஜா அவள் ,
எனை கண்டு வெட்கிச் சிவக்க,
என்ன விஷயம் என்றேன்!
மொட்டவிழ்த்த என்னை ...
வட்டமிட்டது வண்டு என்றாள் !
இழுத்து முகர்ந்த நான் ...
உன்னை விட மாட்டேன் ,
ஏதோ ஒரு வண்டுக்காய்!
சொல்லி விட்ட என்னை ...
சோகமாய் பார்த்தாள் !
வாடி விட்ட என்னவள் ,
வாசமின்றிப் போய் விட்டாள் ?
வண்டு மட்டும் வருகிறது
வாடிக்கையாய்....
என்னவளைத் தேடி !!!!
No comments:
Post a Comment